நந்தலாலா கவிதைகள்
Nandhalala - Tamil poems
Thursday, March 29, 2018
Tuesday, April 25, 2017
காதலும் கவிதையும்
சுகமாய் சுவாசம்
ஆழமாய்
உள் செல்லும் ...
மறுநொடி என்பது
உறுதியில்லை
மனதுக்கு சொல்லிவை ...
மரணம் நிச்சயம் யாவர்க்கும்..
என்றென்பது
புதிரானது...
இதயத்துக்கு
இதமானவர்களை
அருகில் நிறுத்து...
ஆழமாய்
நேசித்தாய் என்பதை
விளங்க சொல்...
வாழ்க்கை என்பது
காதலும் கவிதையும் போலத்தான் ..
எளிமையும் புரிதலும்
இங்கு மிகவும்
அவசியம்!
Monday, November 14, 2016
Sunday, November 6, 2016
Monday, June 13, 2016
பதிவு என் 100
ஒவ்வொரு கவிதைக்கு
பின்னும் கனவுகளும்
ஏமாற்றங்களும் ஒளிந்திருக்கும் ...
இனிமையான தருணங்களும்
இயலாமையும் கொடிபிடிக்கும்
காதல் பாசம் பற்று
பிரிவு பக்தி நேசம்
என பல ரசங்கள்
எல்லாம் சொல்லும் கவிதைகள்
ஊமை மனதின்
மௌன குரலாய்
உற்ற நண்பனாய்
தலை சாய தோள்கொடுக்கும் !
இந்த 100வது பதிவு
என் முதல் தமிழாசிரியர்க்கும்
என் முதல் தோழிக்கும்
சமர்ப்பணம் !
Thursday, June 9, 2016
Sunday, September 6, 2015
கண்ணன் எனும் மன்னன்
மனதினில் மலர்கின்றாய்
பூக்களில் சிரிக்கின்றாய்
மழலையில் திளைக்கின்றாய்
மௌனத்தில் மொழிகின்றாய்
தியானத்தில் ஸ்பரிசித்தாய்
தாயாய் அரவணைத்தாய்
தந்தையாய் கண்டித்தாய்
தோழனாய் தோள் தந்தாய்
நீக்கமற நிறைந்தவனே
நீலவண்ணமாய் திகழ்பவனே
தித்திக்கும் தித்திக்கும்
உன் புகழ் பாட எத்திக்கும்
குழலோசை எதிரொலிக்க
உன் பொற் பாதங்கள்
பணிகின்றேன் !
Tuesday, August 11, 2015
மிட்டாய்
கட்டை மீது
கட்டி வைத்தும்
கை தட்டி அழைத்தாள்!
சிவப்பு மஞ்சளுமாய்
முழுக்கை சட்டையிட்டு
கைகளில் கால் சலங்கை கட்டி
சல சல என சத்தம் எழுப்பி
தெருவெங்கும் அவளை பார்க்க
"ஜவ்வு மிட்டாய் பேரழகி"
அவள் அடிமை அவளை
தோளில் தூக்கி வர
ஒய்யார ஊர்வலமாய்
நகர் வலம் வருகின்றாள்
கட்டி வைத்தும்
கை தட்டி அழைத்தாள்!
சிவப்பு மஞ்சளுமாய்
முழுக்கை சட்டையிட்டு
கைகளில் கால் சலங்கை கட்டி
சல சல என சத்தம் எழுப்பி
தெருவெங்கும் அவளை பார்க்க
"ஜவ்வு மிட்டாய் பேரழகி"
அவள் அடிமை அவளை
தோளில் தூக்கி வர
ஒய்யார ஊர்வலமாய்
நகர் வலம் வருகின்றாள்
Wednesday, July 29, 2015
கலாம் - எங்கள் கனவு நாயகன் !
உன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும்
என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் !
கடைகோடி தீவினிலே பிறந்து
கண்ட கனவுகள் நிறைவேற
பயணம் தொடங்கினாய் !
அறிவியல் அதிசயம் செய்தாய்
ஆசிரியர் என்றே பெருமை கொண்டாய்
நாடு முழுதும் அன்பை விதைத்தாய் !
தேசத்தின் உச்சம் தொட்டாலும்
அதை விட நேசத்தில்
எல்லோர் இதயமும் கலந்தாய் !
கடமை முடிந்ததாய் நினைத்தாயோ ?!
எங்கள் கண்கள் குளமாக கனநேரத்தில்
காலன் துணைகொண்டு உறக்கம் கொண்டாய்!
தீவு பூமி தேடி திரும்பி வந்தாயே தமிழா
நிரந்தர உறக்கத்துடன் ...... நீ இல்லாத
தேசம் தவிக்கிறது கனத்த மனதுடன்!
இனி நிம்மதி நித்திரை கொள் ..
நீ விதைத்த கனவு விதைகள்
விருட்சமாய் உருவெடுக்கும்!
உன் எளிமையும் பண்பும் தன்னடக்கமும்
யுகங்கள் கடந்து தீராமல்
உன் பெருமை பேசும்!
எதிர்காலமே கனவு கொள்ளும்
மீண்டும் இந்தியத்தாய்
உன்னை ஈன்றெடுக்க.....
காத்திருப்போம்
கலாம் அவர்களே
கனவுகளுடன் !!!
என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் !
கடைகோடி தீவினிலே பிறந்து
கண்ட கனவுகள் நிறைவேற
பயணம் தொடங்கினாய் !
அறிவியல் அதிசயம் செய்தாய்
ஆசிரியர் என்றே பெருமை கொண்டாய்
நாடு முழுதும் அன்பை விதைத்தாய் !
தேசத்தின் உச்சம் தொட்டாலும்
அதை விட நேசத்தில்
எல்லோர் இதயமும் கலந்தாய் !
கடமை முடிந்ததாய் நினைத்தாயோ ?!
எங்கள் கண்கள் குளமாக கனநேரத்தில்
காலன் துணைகொண்டு உறக்கம் கொண்டாய்!
தீவு பூமி தேடி திரும்பி வந்தாயே தமிழா
நிரந்தர உறக்கத்துடன் ...... நீ இல்லாத
தேசம் தவிக்கிறது கனத்த மனதுடன்!
இனி நிம்மதி நித்திரை கொள் ..
நீ விதைத்த கனவு விதைகள்
விருட்சமாய் உருவெடுக்கும்!
உன் எளிமையும் பண்பும் தன்னடக்கமும்
யுகங்கள் கடந்து தீராமல்
உன் பெருமை பேசும்!
எதிர்காலமே கனவு கொள்ளும்
மீண்டும் இந்தியத்தாய்
உன்னை ஈன்றெடுக்க.....
காத்திருப்போம்
கலாம் அவர்களே
கனவுகளுடன் !!!
Sunday, October 19, 2014
Subscribe to:
Posts (Atom)